சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை குறித்து Update இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சூர்யா ரசிகர்கள் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து சத்யராஜ், பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ், எம்.எஸ் பாஸ்கர், வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொதுவாக பாண்டிராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு குடும்ப ரசிகர்களின் வரவேற்பு நன்றாகவே இருக்கும். அந்த வகையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரான டி.இமான் இசையமைத்துள்ளார். இன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் சூர்யா துள்ளி குதித்து ஆடும் சில glimpse காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
அந்த வீடியோவின் இறுதியில் கோபத்துடன் சூர்யா நடந்து வரும் காட்சி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது. வருகிற 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை குறித்த முதல் அறிவிப்பு வந்ததிலிருந்தே இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வீடியோ அடங்கிய டுவிட்டர் பதிவை கீழே காணுங்கள்.
சன் பிக்சர்ஸ் தயாரித்து பாண்டிராஜ் இயக்கி சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய சூரியன் FM சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.