Cinema News Interview Stories

இறப்பதற்கு 3 மாதங்களுக்கு முன்பு கூட நா.முத்துக்குமார் நன்றாக இருந்தார்! – சந்திரா தங்கராஜ்

Na-Muthukumar

கள்ளன் பட வெளியீட்டை முன்னிட்டு அப்படத்தின் இயக்குநர் சந்திரா தங்கராஜ் சமீபத்தில் சூரியன் FM நேர்காணலில் பங்குபெற்றார்.

அவரிடம் கள்ளன் படம் குறித்த நிறைய விஷயங்களை பேசினோம். அப்போது கள்ளன் படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய பாடல் குறித்து கேள்வியெழுப்பினோம். அதற்கு பதிலளித்த இயக்குநர் சந்திரா தங்கராஜ், “நா.முத்துக்குமார் இறப்பதற்கு 2, 3 மாதங்களுக்கு முன்பு தான் இந்த பாடலை எழுதினார். அப்போதெல்லாம் நன்றாக தான் இருந்தார். உள்ளுக்குள் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம்.

நா.முத்துக்குமார் அவர்களை எனக்கு முன்கூட்டியே கற்றது தமிழ் பட சமயத்திலிருந்தே தெரியும். இயக்குநர் ராம் அவர்களின் நண்பராக தெரியும். அண்ணா என்று தான் அழைப்பேன். அவரும் என் மீது மிகவும் அன்பாக இருப்பார். எனக்காக அவர் ப்ரொடியூசர் எல்லாம் தேடி இருக்கிறார்.

நா.முத்துக்குமார் அண்ணா இந்த படத்தில் பாட்டெழுத வேண்டுமென முன்கூட்டியே முடிவு செய்து விட்டேன். முதலில் ஒரு பாட்டெழுதி கொடுத்தார். Record செய்து விட்டோம். பின்னர் எனக்கு இந்த பாடல் சரிவர வில்லை என்று தோன்றியது. நா.முத்துக்குமார் அண்ணாவிடம் இதனை கூறினேன். அவர் உடனே ‘சரி மாத்திடலாம்’ என்றார். ஒரு நாள் நேரில் வந்தார். நான், அண்ணா மற்றும் இசையமைப்பாளர் கே மூவரும் அமர்ந்து 2 நாட்களில் 3 பாடல்களை முடித்தோம்” என்று கூறினார்.

மேலும் இசையமைப்பாளர் ‘கே’ அவர்களும் நா.முத்துக்குமார் குறித்தும், அவருடனான மறக்க முடியாத நினைவுகள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

முழு நேர்காணலை கீழுள்ள இணைப்பில் காணுங்கள் :

Article By MaNo