எதற்கும் துணிந்தவன் பட வெளியீட்டை முன்னிட்டு சமீபத்தில் சூரியன் FM நேர்காணலில் ‘புகழ், பழைய ஜோக் தங்கதுரை மற்றும் ராமர்’ ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பழைய ஜோக் தங்கதுரையிடம் அவருடைய ஜோக் எப்படி ஒர்க் அவுட் ஆகிறது என்று கேள்வியெழுப்பினோம்.
அதற்கு பதிலளித்த தங்கதுரை “பழைய ஜோக் நிறைய சொல்லியிருக்கிறேன். அதனை தாண்டி நிறைய புதிய ஜோக்குகளும் சொல்லியிருக்கிறேன். அதனால் தான் நிறைய ஜோக் சொல்ல முடிகிறது. மேலும் நான் ஜோக் சொல்லும் போது ஒரு ஸ்டைல் இருக்கும். அதை ராமர் கலாய்ப்பாரு. எனவே அந்த ஜோக் இன்னும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.
பிரியங்கா மோகனிடம் நிறைய ஜோக் சொல்லியிருக்கிறேன். அவங்க எனக்கு சிரிப்பு வரல வேற ஜோக் சொல்லுங்கனு சொல்லுவாங்க. பிரியங்கா மோகனிடம் மொத்தம் 110 ஜோக் சொல்லியிருக்கிறேன். புகழ் ஜோக் சொன்னாலும் பிரியங்கா மோகன் சிரிக்க மாட்டாங்க. ராமர் முகத்த பார்த்ததும் சிரிச்சுடுவாங்க” என்று கூறினார். அதற்கிடையில் ராமர், புகழ் இருவரும் தங்கதுரையை பேசவிடாமல் கலாய்த்துக் கொண்டே இருந்தனர்.
கலகலப்பான இந்த நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள் :