Cinema News Specials Stories

இந்தக்கால பாட்டுக்கொரு தலைவன்!

“எனக்குள் ஒருவனாக” தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி நமக்குள் ஒருவராய் மாறிப்போன கோலிவுட் பாடலாசிரியர்களில் விவேக்தான் இன்றைய சென்சேஷன்.

படிச்சது சிவில் இன்ஜினியரிங் என்றாலும் இவர் புடிச்சது மெட்டுப் பேனா! வார்த்தை ஜாலங்களில் விளையாடும் நவீன ஹைடெக் கவிஞன். தளபதி விஜய் – இசைப்புயல் – விவேக் தான் இன்றைய தலைமுறையின் ஃபேவரைட் விருப்பம். உங்க Playlist-லயும் இந்த கூட்டணியோட பாடல்கள் நிச்சயம் இருக்கும். நம்பலனா மொபைல் எடுத்து பாருங்க.

‘OMG பொண்ணு’, ‘வா ரயில் விட போலாமா’, ‘வெறித்தனம்’, ‘மனிதி வெளியே வா’… இந்த மாதிரி பலவிதமான பாடல்களுக்குள்ள இவரின் திறமை மின்னுவதை காதார கேட்கலாம். “டங்கா மாறி“, “சிம்டாங்காரன்” மாதிரி குத்து பாட்டிலும் பட்டி தொட்டியெல்லாம் தலைவன் தொட்டதெல்லாம் ஹிட்டு ரகம்.

சர்காரில் ஒரு விரல் புரட்சியில் தளபதிக்கு புடிச்ச ஆஸ்தான பாடலாசிரியர் ஆகிவிட்டார். ‘வாடி ராசாத்தி’, ‘மனிதி வெளியே வா’, ‘சிங்கப்பெண்ணே’ மாதிரி நிறைய பெண்களை மையப்படுத்திய சமீபத்திய பாடல்களின் வரிகளை வார்த்தெடுத்த பெருமை இவருக்கு மட்டுமே.

தண்ணி எப்படி பாத்திரத்துக்கு ஏத்த மாதிரி வடிவத்த மாத்திக்குமோ அதுபோல எந்த மாதிரியான Situation கொடுத்தாலும் அதுக்கேத்த மாதிரி பக்காவா பாட்ட எழுதி கொடுத்துடுவாரு. கடந்த 9 ஆண்டுகளில் தமிழ் சினிமா கொண்டாடும் ரஞ்சித(மே)மாக மின்னும் இவரின் இந்த வருட பிறந்தநாள் அடுத்த வருடம் லியோ வாய் ஜொலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

‘ஆசை அடக்கிட தெரிஞ்சா எல்லாம் காலடியில் கிடக்கும்’னு ‘பேட்ட’யில இவர் எழுதிய இந்த வரிதான் இவரின் அதிகபட்ச ஆசையென அவரே தெரிவித்திருக்கிறார். நீங்க ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கட்டும் விவேக்!!
இந்த பிறந்த நாளில் உங்களை வாழ்த்துவதில் எங்களுக்கு பெருமை !!

Article By RJ Kannan