சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது நிறைய புகைப்படங்களில் கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் இரண்டும் தொட்டுக் கொண்டிருக்கும் படியான முத்திரையுடன் காட்சியளிப்பார். ரசிகர்களுடனான சில புகைப்படங்களில் கூட அந்த யோகா முத்திரையை செய்தபடி இருப்பார்.
அந்த முத்திரைக்கான அறிவியல் ரீதியான காரணம் என்ன என்பது குறித்து சமீபத்தில் சூரியன் FM-க்கு பேட்டியளித்த யோகா கல்பனா அவர்களிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த கல்பனா “அதன் பெயர் சின் முத்திரை. நமது கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களின் நுனிகளை வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அப்படி செய்யும் போது நம் மூளை நரம்புகள் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். மேலும் இந்த முத்திரையை செய்த படி அமர்ந்திருந்தால் நமது உடல் நரம்புகளுக்கு அமைதி தரும்.
இதனால் தான் தியானத்தின் போது நமது கவனம் சிதறாமல் அமைதியாக இருக்க இந்த முத்திரையை உபயோகிக்கிறோம். இது சித்தர்கள் கண்டுபிடித்தது. நமது கை மற்றும் கால் விரல்களில் இருந்து உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் செல்லும் நரம்புகள் உண்டு.
இதனால் தான் விரல்களில் அழுத்தம் கொடுக்கிறோம். மேலும் இந்த முத்திரையை நீங்கள் தொடர்ந்து செய்து வரும்போது அதன் பலனை நீங்களே உணர்வீர்கள்” என்று கூறினார்.
மேலும் யோகாசனங்கள் குறித்தும், அவரது சாதனைகள் குறித்தும் பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள் :