வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் சசிக்குமாரை வைத்து இயக்கியுள்ள புதிய படம் ‘எம்.ஜி.ஆர் மகன்’. இப்படம் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவிருந்த நிலையில் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் சற்று தள்ளி வைத்துள்ளனர்.
நாடெங்கும் கொரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில், மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதை மனதில் கொண்டு எம்.ஜி.ஆர் மகன் படக்குழுவினர் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அக்கடிதத்தில், “மக்களின் பாதுகாப்பு கருதியும், எங்கள் படக்குழுவினரின் உழைப்பு அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும், விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கினங்கவும் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளனர். கொரோனா இரண்டாம் அலையால் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் தங்களது காத்திருப்பை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள கடிதத்தை கீழே காணுங்கள்.
எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தில் சசிக்குமாருடன் இணைந்து சத்யராஜ், மிர்னாலினி ரவி, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் family entertainer-ஆக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் சசிக்குமாரும், இயக்குனர் பொன்ராமும் நம்முடன் பகிர்ந்து கொண்ட வீடியோ உரையாடலை கீழே காணுங்கள்.