‘ராதே ஷ்யாம்’ பட வெளியீட்டை முன்னிட்டு சமீபத்தில் சூரியன் FM நேர்காணலில் பாடலாசிரியர் மதன் கார்க்கி பங்கேற்றார்.
அப்போது அவரிடம் தமிழ் மீதான தீராத காதலுக்கு காரணம் என்னவென்ற கேள்வியெழுப்பினோம். அதற்கு பதிலளித்த அவர், “தாத்தா தமிழ் பேராசிரியர், அம்மா தமிழ் துறையில் துணைப் பேராசிரியர், அப்பா தமிழ் முழுக்க படித்து விட்டு எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் அப்போதெல்லாம் எனக்கு தமிழ் மீது ஆர்வமில்லை.
அவர்கள் கூடவே இருந்த போது எதுவும் தோன்றவில்லை. ஆனால் அவர்களையெல்லாம் விட்டு விலகி கல்லூரியில் கணிப்பொறியியல் படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய இறுதி வருட Project-ஐ தமிழில் செய்ய வேண்டுமென ஒரு ஆர்வம் வந்தது. அதன் பிறகு தமிழ் இலக்கணம் படிக்க ஆரம்பித்தேன். அப்படியே அதன் மீதான ஈர்ப்பு அதிகரித்து இன்று வரை அது தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்.
மேலும் ராதே, ஷ்யாம் படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்தும், புதிய புதிய தமிழ் சொற்களை எப்படி உருவாக்குகிறார்கள் என்பது குறித்தும் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள் :