Cinema News Stories

மாஸ்டர்-ஐ பார்க்க சொன்ன ஈஸ்வரன் !!!

திரையரங்குகளுக்கு சென்று படங்களை பார்க்க நீண்ட நாட்கள் காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த பொங்கலுக்கு தளபதி விஜயின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படங்கள் திரையில் வெளியாகின்றன. இது குறித்து நடிகர் சிம்பு கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் தன் படமான “ஈஸ்வரன்” படத்தை மட்டுமின்றி தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை பற்றியும் எழுதியுள்ளார். தங்களை போன்ற கலைஞர்களை வளர்த்த Medium-ஐ மரியாதை செய்வதற்கே இந்த இரு படங்களும் திரையில் வெளியிடப்படுகிறது என சிம்பு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அக்கடிதத்தில் ” திரையரங்குகளை பழைய நிலைக்கு மீட்கவே ஈஸ்வரன் திரைப்படம் குறைந்த நாட்களில் விரைவாக எடுக்கப்பட்டது. இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஆன்லைன் வெளியீடுகள் சினிமா துறையினரை ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம் ” என உருக்கமாக எழுதியுள்ளார்.

தன் படத்தை மட்டும் திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள் என்று சொல்லாமல், “அண்ணன் ” விஜய் அவர்களின் படத்தையும் திரையரங்குகளுக்கு சென்று கண்டு மகிழுங்கள் என சிம்பு இக்கடிதம் மூலம் கூறியுள்ளது சிம்பு ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இக்கடிதத்தை சிம்பு வெளியிட்ட சில நிமிடங்களில் இருந்தே ரசிகர்கள் உற்சாகத்துடன் அவரது பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டிற்குள் திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்கள் அமர்வதற்கு அனுமதி தருமாறும் தமிழக அரசிடம் சிம்பு இக்கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிம்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.