Cinema News Stories

இரண்டாவது முறையாக தந்தையான சிவகார்த்திகேயன் !!!!

சிவகார்த்திகேயனின் அழகான குடும்பத்தில் ஒரு புதிய அரும்பாய் அவரது மகன் பிறந்திருக்கிறார் என்பதை சிவகார்த்திகேயன் தற்போது தனது ட்விட்டர் பதிவு மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 18 வருடங்களுக்கு பிறகு தனது தந்தை தனது விரலை தன் மகன் ரூபத்தில் வந்து பிடித்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். இப்பதிவு பார்க்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் உருவாக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

Image

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுடன் சேர்த்து தனது குழந்தையுடன் கைகோர்த்து இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சிவகார்த்திகேயனின் மறைந்த தந்தையின் பெரிய புகைப்படம் முன்பு சிவகார்த்திகேயனும் குழந்தையும் கைகோர்த்து இருக்கும்படி Click செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் இப்பதிவில், “என் பல வருட வழிப்போக்க தன் உயிர் வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர் துளிகளால் நன்றி.. அம்மாவும் குழந்தையும் நலம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை சிவகார்த்திகேயன் சமூகவலைதளங்களில் வெளியிட்ட சில நிமிடங்களில் இருந்தே திரை உலக பிரபலங்களும், சினிமா ரசிகர்களும் சிவகார்த்திகேயனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராதனா எனும் பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக தந்தை ஆகியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.