Cinema News Stories Trending

காத்திருக்க சொன்ன சூர்யா-வின் கடிதம் !!!!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30 அன்று OTT தலத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் ” சூரரைப் போற்று திரைப்படம் நம் அனைவருக்குமே மனதால் நெருக்கமான படம் என்பதை நான் உணர்கிறேன். எனினும் இப்படத்தின் வெளியீடு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும் என்பதை நான் நன்கு உணர்கிறேன். விரைவில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பல சுவாரஸ்யமான அப்டேட்டுகள் உங்களை வந்தடையும் என குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா வெளியிட்டுள்ள கடிதத்தின் டுவீட்டை கீழே காணுங்கள்.

மேலும் இந்த தருணத்தில் நட்பின் அடையாளமாக இருக்கும் “ஆகாசம் “ பாடலின் சிறிய வீடியோ ஒன்றையும் வெளியிடுவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் சூப்பர்ஹிட் ஆகியுள்ள நிலையில், ஆகாசம் பாடலும் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாய் அமைந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு அருண்ராஜா காமராஜ் வரிகளை செதுக்கியுள்ளார். இப்பாடலில் தோன்றும் காட்சிகள் அணைத்தும் சூரரைப் போற்று திரைப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப் போற்று பல தடைகளை கடந்து வென்று சரித்திரம் படைத்த திரைப்படமாக இருக்க வேண்டும் என்பதே சூர்யா ரசிகர்களின் எண்ணமாக இருந்து வருகிறது. ஆகாசம் பாடலின் ஒன்றரை நிமிட வீடியோவை கீழே காணுங்கள்.