Specials Stories

சூப்பர்ஸ்டார் Special – Get Rajinified

சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகுசிறப்பாக கொண்டாடி வருகின்றனர். நம் சன் குடும்பத்தின் தொகுப்பாளர்கள் ரஜினி மீது தங்களுக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் உரையாடல் தான் இது.

இந்த சிறப்பு உரையாடலில் தொகுப்பாளர்கள் அக்ஷயா, ராகேஷ், அகல்யா, பார்வதி, Doubt செந்தில் மற்றும் அஸ்வந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

விசில் பறக்கும் வசனங்கள்

சூப்பர்ஸ்டார் படம் என்றாலே வசனங்களுக்கு தனி முக்கியத்துவம் இருக்கும். அவர் பேசிய வசனங்களுக்கு தியேட்டரில் விசில்களும் கைத்தட்டல்களும் வேற Level-ல் இருக்கும். 

அவரது படங்களில் வரும் வசனங்களுக்கெனவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வசனங்களை மக்கள் வெறும் வசனமாக மட்டும் பார்க்காமல், அவற்றை தங்கள் வாழ்க்கைக்கு நல்ல அறிவுரையாக பார்க்கின்றனர். அப்பேர்ப்பட்ட வசனங்களில் இருந்து தங்களுக்கு பிடித்த வசனங்களை அணைத்து தொகுப்பாளர்களும் ரஜினியின் பாணியிலேயே பேசிக் காட்டினர்.

சூப்பர்ஸ்டார் ரஜினி
சூப்பர்ஸ்டார் ரஜினி

மேலும் அவர்கள் பேசிக்காட்டிய வசனங்கள் அவர்களுக்கு ஏன் பிடிக்கும் என்பதை பற்றியும் கலகலப்பாக உரையாடியுள்ளனர்.

மனம் கவர்ந்த படம்

ரஜினிகாந்த் இதுவரை 166 படங்களில் நடித்துள்ளார். அதில் பெரும்பாலான படங்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது. அதிலும் ஒருசில படங்கள் நம் மனதை கொள்ளையடித்த திரைப்படங்களை அமைந்திருக்கும்.

இவ்வகையில் தொகுப்பாளர்கள் அனைவரும் தங்கள் மனம் கவர்ந்த சூப்பர்ஸ்டார் ரஜினியின் திரைப்படங்களைப் பற்றி கூறியுள்ளனர்.

தொகுப்பாளர் அஸ்வந்த், ரஜினி நடித்ததில் தில்லு முல்லு தான் அவரது மனம் கவர்ந்த திரைப்படம் என்று கூறினார். ‘அதில் ரஜினி பல விதமான நடிப்பை வெளிப்படுத்துவார், மிகவும் Romantic-ஆகவும் இருப்பார்’, அதனால் தான் அப்படம் பிடிக்கும் என்று கூறினார்.

படையப்பா மற்றும் அருணாச்சலம் தான் ராகேஷின் மனம் கவர்ந்த திரைப்படம் என்று கூறினார். இந்த படங்களை பார்க்கும்போது எல்லோருக்கும் ஒரு புத்துணர்வும் தன்னம்பிக்கையும் பிறக்கும் எனவும் வாழ்வில் முன்னேற நினைக்கும் அனைவருக்கும் அப்படங்கள் ஊக்கம் அழுக்கும் வங்கியிலும் இருக்கும் என்று கூறினார்.

அகல்யா கூறுகையில் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறினார். ரஜினி நடித்த சகோதர சகோதரிகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் அமைந்த காட்சிகள் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.

சூப்பர்ஸ்டார் ரஜினி
சூப்பர்ஸ்டார் ரஜினி

ரஜினி ரசிகர்கள் அனைவரும் விரும்பி பார்க்கக்கூடிய ஒரு படம் தான் முத்து. இந்த படம் தான் தொகுப்பாளர் பார்வதிக்கும் மனம் கவர்ந்த ரஜினி படம் என்று கூறினார். அந்த படத்தை எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் தான் சலிக்காமல் விரும்பி பார்ப்பதாக அவர் கூறினார்.

தலைவர் ரஜினியை ஒரு Mass-ஆன Gangster-ஆக காண்பித்த ஒரு படம் தான் பாட்ஷா. இப்படம் பெரும்பாலும் அனைவரையும் கவர்ந்த ஒரு தலைவர் படமாக இருக்கிறது. பாட்ஷா தான் தொகுப்பாளர் Doubt செந்திலின் மனம் கவர்ந்த படம் என்று கூறினார்.

இப்படத்தை பார்க்கும் போது தனுக்குள் ஒரு வீரம் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஜினி ரசிகர்களுக்கு பாட்ஷா படம் ஒரு விருந்தாகவே அமைந்தது என்று சொல்லலாம்.

என்றும் சூப்பர்ஸ்டார்

இதைத்தாண்டி ரஜினியை ஏன் மக்கள் சூப்பர்ஸ்டாராக கொண்டாடுகிறார்கள் என்பதை பற்றி தொகுப்பாளர்கள் அனைவரும் கலந்துரையாடினார்கள். ரஜினியை நாம் கொண்டாட பல காரணங்கள் உண்டு. அவரது எளிமை தான் அவரை இந்த இடத்தில வைத்திருக்கிறது.

“பாசமுள்ள மனிதனப்பா நன் மீசை வச்ச குழந்தையப்பா” போன்ற வரிகள் தலைவருக்கென செதுக்கிய வரிகளாய் அமைந்தன.

ரஜினியைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களையும் தொகுப்பாளர்கள் அவர்களிடையே பகிர்ந்து கொண்டனர். சூப்பர்ஸ்டார் பற்றி அவர்களிடையே  நடந்த கலகலப்பான உரையாடலை கீழே உள்ள வீடியோவில் கண்டு மகிழுங்கள்.