Specials Stories

Single பசங்களின் சங்கீதமாய் யுவன்

Yuvan special
Yuvan Single special

Single-ஆக இருப்பவர்கள் கேட்டு ரசிக்கக் கூடிய யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த பாடல்களின் ஒரு சிறிய தொகுப்பு இதோ.

பாடல்களின் தொகுப்பு

    • நமது List-ல் முதல் பாடல், சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் நா. முத்துக்குமாரின் வரிகளில் அமைந்த ‘எம்.ஜி.ஆரும் இல்லீங்க நம்பியாரும் இல்லீங்க‘ பாடல். இப்பாடலில் வரும் வரிகள் அனைத்தும் Single பசங்களுக்கென செதுக்கிய வரிகளாய் அமைந்திருக்கும்.
    •  “ராத்திரியெல்லாம் தூங்கமாட்டோம் Round அடிப்போம், சாத்துற நேரம் நாயர் கடை டீ குடிப்போம்” போன்ற வரிகள் Single பசங்களை கவரும் வகையில் அமைந்திருக்கும்.

    • அடுத்ததாக Single-ஆக இருந்து Mingle-ஆக தவிப்பவர்கள் கேட்டு ரசிக்க வேண்டிய பாடல், 7G ரெயின்போ காலனி படத்தில் உள்ள ‘நாம் வயதுக்கு வந்தோம்’ பாடல். இப்பாடலில் வரும் அணைத்து வரிகளும் Single-ஆக இருக்கும் இளைஞர்களின் ஏக்கத்தை கூறும் வகையில் இருக்கும். யுவனின் இசையும் அந்த வரிகளுக்கு உயிர் கொடுக்கும்படி அமைந்திருக்கும்.
    • “பிப்ரவரி 14 வந்தால் தனிமை அது உருத்தியதே, போனில் தினம் குட் நைட் சொல்ல Girl Friend இல்லை கசக்கிறதே”, எனும் வரிகள் Single-களின் ஏக்கத்தை விளக்கும்.

    • Single-ஆக இருப்பவர்கள் கேட்டு பெருமைப்பட வேண்டிய ஒரு பாடல் தான் வல்லவன் படத்தில் அமைந்த ‘போடு ஆட்டம் போடு’ பாடல். இப்பாடலில் யுவனின் இசை எல்லோரையும் குத்தாட்டம் போட வைத்தது.
    • “ஊரே துணையிருக்கு, எனக்கிங்கு வேறு உறவெதுக்கு”, போன்ற வரிகள் காதல் இல்லாமல் இருக்கும் தனிமைக்கும் கூட தன்னம்பிக்கை கொடுக்கும்.

    • காதலிக்காமல் இருக்கும் இளைஞர்களின் ஒரு நாள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அழகாக சொல்லும் பாடல் தான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் உள்ள ‘பாஸு பாஸு’ பாடல்.
    • “தள்ளுவண்டி கடையில கடன் சொல்லி LUNCH டா, எங்களோட ஆபீஸ் எல்லாம் டீ கடையில் BENCH டா” போன்ற கலகலப்பான வரிகள் இப்பாடலில் இடம்பெற்றிருக்கும்.

    • காதலிக்காமல் இருப்பது தான் நமக்கு பாதுகாப்பு என்பதை உணர்த்தும் வகையில் அமைந்த பாடல் தான் சென்னை-28 படத்தில் அமைந்த ‘ஜல்சா பண்ணுங்கடா’ பாடல். இப்பாடல் பலருக்கும் நட்பின் இலக்கணமாகவும் திகழ்கிறது.
    • “டாவுல விழுந்தாக்க மனசு நோவுல விழுகுமடா, தீவுல இருப்பது போல் திசையே தெரியாம போகுமடா”, எனும் வரிகள் காதலில் விழ நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை வரிகளாக அமைந்திருக்கும்.

    • ஒருதலைக் காதலர்களின் வழியை உணர்த்தும் வகையில் அமைந்த பாடல் தான் மௌனம் பேசியதே படத்தில் அமைந்த ‘சின்ன சின்னதாய் பெண்ணே’ பாடல். இதில் யுவனின் இசை அணைத்து ஒருதலைக் காதலர்களையும் உருக வைக்கும் வகையில் இருக்கும்.
    • “காதல் செய்தால் பாவம், பெண்மை எல்லாம் மாயம், உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே”, என்ற வரிகள் இப்பாடலில் இடம்பெற்றிருக்கும்.

    • இந்த காலத்தில் உண்மையான காதல் குறைந்துவிட்டது, அதனால் காதலே வேண்டாம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்த பாடல் தான் கழுகு படத்தில் உள்ள ‘ஆம்பளைக்கு பொம்பளைக்கும் அவசரம்’ பாடல்.
    • “காதல் எல்லாமே ஒரு கண்ணாமூச்சி, ஆணும் பெண்ணுமே இதில் காணாம் போச்சு”, போன்ற வரிகளுடன் அமைந்த இப்பாடல் பலரையும் துள்ளிக்குதிக்க வைத்தது.

      • நமது வரிசையில் கடைசியாக இருக்கும் பாடல் புதுப்பேட்டை படத்தில் உள்ள ‘ஒரு நாளில்’ பாடல். இப்பாடல் வாழ்க்கையின் அர்த்தத்தை கூறுவதோடு தனிமைக்கு புது இலக்கணம் வகுக்கும் பாடலாகவும் அமைந்திருக்கும்.
      • “இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும், நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்”, போன்ற வரிகள் யுவனின் குரலில் நம் மனதில் ஆழமாய் பதியும்படி அமைந்திருக்கும்.

நம் வாழ்வின் அங்கமாய் யுவன்

இதைத்தாண்டி உங்கள் மனம் கவர்ந்த யுவன் பாடல்களை கமெண்டில் பதிவு செய்யுங்கள். யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் அனைத்தும் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிப்போகிவிட்டது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.