Cinema News Interview Stories

இந்த விஷயத்தால நான் பயந்து போயிருந்தேன்! – திவ்யா துரைசாமி

Dhivya-Duraisamy

குற்றம் குற்றமே பட வெளியீட்டை முன்னிட்டு சமீபத்தில் அப்படத்தின் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் அஜீஷ் மற்றும் கதாநாயகி திவ்யா துரைசாமி மூவரும் சூரியன் FM நேர்காணலில் பங்கேற்றனர்.

நடிகை திவ்யா துரைசாமி கதாநாயகியாக நடித்துள்ள முதல் திரைப்படம் இது என்பதால் அவரிடம், இப்படத்தில் நடித்த அனுபவம் மற்றும் இயக்குநர் சுசீந்திரன் உடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு இது முதல் படம் என்பதால் இந்த படமே ஒரு workshop தான். ஸ்ம்ருதி கூட ஏற்கனவே 2, 3 படங்கள் நடித்திருந்தார். நான் மட்டும் தான் புதுசு. எனவே அனைவரிடமும் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தது.

இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்க செல்லும் போது நான் யாரிடமும் தயக்கமின்றி சாதாரணமாக பேசியது கிடையாது. ஆனால் சுசீந்திரன் சார் ரொம்ப comfort & cool. முதல் படம் நடிக்கும் போது யாராவது ஏதாவது சொல்லி விட்டால் நாம் மனம் உடைந்து போய் விடுவோம். அடுத்த அடி எடுத்து வைக்க யோசிப்போம். நான் அப்படி ஒரு விஷயத்தில் பயந்து போயிருந்தேன். ஏனென்றால் திரைத்துறையில் கதாநாயகிகள் பெரும்பாலும் Fair skintone உடன் இருக்கின்றனர். அடுத்த மாநிலங்களிலிருந்து நிறைய பேர் வருகின்றனர். நம்மால் நீடிக்க முடியுமா என்ற பயத்தில் இருந்தேன்.

அப்போது சுசீந்திரன் சார் மற்றும் வேல்ராஜ் சார் இருவரும் உன்னுடைய skintone தான் உனக்கு plus என்று கூறினர். இருவரும் அந்த வார்த்தையை கூறிய பின்பு நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வந்தது. சாரே சொல்லிட்டாங்க வேறன்ன வேணும் என்று தோன்றியது. அவர் கூறிய வார்த்தையில் எனக்கு பெரிய அளவிலான நம்பிக்கை கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட விஷயங்களை தான் இயக்குநர் சுசீந்திரன் சாரிடம் நான் கற்றுக் கொண்டேன்” என்று கூறினார்.

மேலும் ‘குற்றம் குற்றமே’ படம் குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

முழு நேர்காணலை கீழுள்ள இணைப்பில் காணுங்கள் :

Article By MaNo