Cinema News Interview Stories

‘ஆகூழிலே’ பாடலுக்கு இசையமைக்கும் போதே யுவன் தான் நினைவில் வந்தார்! – ஜஸ்டின் பிரபாகரன்

Yuvan

சமீபத்தில் ‘ராதே ஷ்யாம்’ வெளியீட்டை முன்னிட்டு அப்படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் சூரியன் FM நேர்காணலில் பங்கேற்றார். அப்போது அவரிடம் ராதே ஷ்யாம் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து நிறைய விஷயங்கள் பேசினோம்.

குறிப்பாக ராதே ஷ்யாம் படத்தில் யுவன் சங்கர் ராஜா பணியாற்றிய அனுபவம் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பினோம். அதற்கு பதிலளித்த அவர் “ஆகூழிலே பாடலை போகிற போக்கில் 10 நிமிடத்தில் தயார் செய்து விட்டோம். பாடலை கம்போஸ் செய்யும் போதே யுவன் சார் தான் பாட வேண்டும் என முடிவு செய்து விட்டேன். அப்போதே இயக்குநரிடமும் இந்த பாடலை யுவன் சார் தான் பாட வேண்டும் என சொல்லி விட்டேன்.

பின்னர் அடுத்தடுத்த பாடல்களுக்காக பணியாற்றினோம். மற்ற பாடல்களை முடித்து விட்டு மீண்டும் இந்த பாடலுக்கு வந்தோம். இந்த பாடலை யுவன் sir தான் பாட வேண்டுமென்ற முடிவுக்கு வந்து நேராக அவரிடம் சென்று விட்டோம். நிச்சயமாக இந்த பாடலை அவர் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார் என்பது தெரியும்.

ஒரு சில பாடலுக்கு இசையமைக்கும் போதே இவர் பாடினால் நன்றாக இருக்கும் என்று இசையமைப்பாளருக்கு தோன்றும். அந்த பாடலை அவர் பாடினால் தான் நன்றாக இருக்கும். யுவன் என்னுடைய பேவரைட். இதற்கு முன்பே ஒரு படத்திற்காக அவரை தொடர்பு கொண்டோம். ஆனால் அப்போது அவர் busy-ஆக இருந்தார். இந்த படத்தில் அது அமைந்துவிட்டது. Dream comes true” என்று கூறினார். மேலும் ‘ஆகூழிலே’ பாடலை யுவன் பாடிய விதம், பாடல் குறித்து யுவன் சொன்ன கருத்து என பல்வேறு விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள் :

Article By MaNo