Specials Stories Trending

மகேஷ் பாபுவின் சவாலை ஏற்பாரா தளபதி விஜய் ??

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு அவர்கள் தளபதி விஜய்க்கு ஒரு சவாலை ஏற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதுபற்றிய விவரங்களை இப்பதிவில் காணலாம்.

தனது 45வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் மகேஷ்பாபு அதனை பயனுள்ள வகையில் கொண்டாட முடிவு செய்து தன் வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டு, அந்த வீடியோவை இணையத்தில் #GreenIndiaChallenge என்ற டேகில் பகிர்ந்துள்ளார். அப்பதிவில் அவர், “இதைவிட சிறந்த வழியில் என்னுடைய பிறந்தநாளை கொண்டாட முடியாது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமின்றி இந்த கிரீன் இந்தியா சவாலை  தளபதி விஜய், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரை ஏற்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த சங்கிலி தொடரட்டும் எனவும், அனைவரும் இந்த சவாலை ஏற்று பசுமையான உலகத்தை உருவாக்க முதல் படியை எடுத்து வைப்போம் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். மஹேஷ்பாபுவின் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

மகேஷ்பாபுவின் இந்த செயலை பாராட்டி பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். மகேஷ்பாபுவின் ரசிகர்கள் பலரும் அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இந்த சவாலை ஏற்று மரங்களை நட்டு தங்கள் வீடீயோக்களையும், புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

தளபதி விஜய் இந்த கிரீன் இந்தியா சவாலை ஏற்று மரம் நடுவரா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்த கிரீன் இந்தியா சவாலை திரையுலக பிரபலங்கள் பலரும் ஏற்று மரங்கள் நட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகைகள் பூமிகா, அனுபாமா, சமந்தா, ராஷி  கண்ணா, டிகங்கனா, நடிகர்கள் அஜய் பூபதி, சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் இந்த சவாலை ஏற்று மரக்கன்றுகள் நட்டு உள்ளனர்.

தளபதி விஜய் போன்ற மாஸான நடிகர்கள் இந்த சவாலை ஏற்கும் போது இந்த கிரீன் இந்தியா சவால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும். மகேஷ்பாபுவின் இந்த கிரீன் இந்தியா சவாலை தளபதி விஜய் ஏற்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.