சர்வதேச புலி தினம் (International Tiger Day) ஆண்டுதோறும் ஜூலை 29 அன்று கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியில் புலிகள் எண்ணிக்கை குறைவடைந்து வருவதால், அவற்றை பாதுகாக்கும் முக்கியத்துவத்தை நினைவூட்டும் நாளாக இது அமைகிறது.
புலி என்பது பயங்கரமான ஒரு காட்டு விலஙகாகும். ஆனால் அதன் பங்களிப்பு புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலைக்கு அளப்பரியது.
புலி என்பது நம் வாழ்வியலுக்குத் தேவையான பல விஷயங்களை கற்றுக் கொடுக்கின்றது.சிங்கமும் புலியும் சேராமல் இருப்பது இயற்கையின் அதிசயம் ஆகும்.
புலிகள் தங்கள் உடல் எடையை விட இரண்டு மடங்கு எடையுள்ள விலங்குகளைக் கொன்று, அவற்றை மரத்தின் மேல் இழுத்துச் செல்லும் சக்தி கொண்டவை!
மனிதரின் உருதிரை (fingerprint) போல், ஒவ்வொரு புலிக்கும் தனி கோடுப்படிவம் (stripes) உண்டு. இது அடையாளம் காண உதவுகிறது.
உலகில் 9 வகை புலிகள் இருந்தன, ஆனால் அதில் 3 வகைகள் அழிந்துவிட்டன. தற்போது முக்கியமாக பெங்கால் புலி, சைபீரிய புலி போன்றவை மட்டுமே அதிகமாக காணப்படுகின்றன
ஒரு புலி இறந்தால் காட்டுக்கு அவ்வளவு இழப்பாகுமாம்
சர்வதேச புலி தினம் என்பது வெறும் ஒரு தினவிழா அல்ல – இது ஒரு பொறுப்பும், விழிப்புணர்வும் ஆகிய இரண்டையும் மையமாகக் கொண்ட நாள். இயற்கையின் ராஜா என போற்றப்படும் புலியை பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் நம் பங்கு ஆற்ற வேண்டும்.
“புலி காப்போம் – புவி காப்போம்!”

