10 Tamil Movies Based on a Novels – இப்போ இருக்கிற ரசிகர்களோடு ரசனைக்கு ஏத்தமாதிரி ஆக்ஷன், ரத்தம் தெறிக்க தெறிக்க படம் எடுக்குறது பார்த்துட்டு தமிழ் சினிமா-ல கதைக்கு பஞ்சம்-னு சொல்லி ஆன்லைன்-ல விமர்சனம் செய்யுற எல்லாரும் கவனிக்கவேண்டிய விஷயம் என்னனா நம்ம கிட்டையும் கதைகள் இருக்கு. அந்த கதைகளை தழுவி வெளியான பல தமிழ் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டிருக்கு. அழகான கதைகளோடு நம்ம கலாச்சார வாழ்வியல இனச்சு பல படங்கள் வெளியாகிருக்கு. இந்த வீடியோ-ல தமிழ் சினிமால நாவல் கதைகளை தழுவி வெளியாகி ஹிட் அடித்த தமிழ் படங்கள் பத்தி தான் பாக்கபோறோம்.

2010-ல தமிழ் சினிமா-வ இந்திய சினிமாவே திரும்பிப்பார்த்த தருணம்.. உங்க எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்க, ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில உருவான ‘எந்திரன்’ படம் ரிலீஸான Momment. இந்த படம் அப்போவே 300 கோடிகள் தாண்டி வசூல் செஞ்சு பல சாதனைகள் படச்சது. ‘என் இனிய இயந்திர’ என்ற நாவலை தழுவி தான் எந்திரம் படம் எடுக்கப்பட்டது. எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் 1980-ல எழுதிய ஒரு புகழ் பெற்ற நாவல் கதை. இந்த கதைய மையமா வச்சுதான் எந்திரன் படத்த இயக்குனர் ஷங்கர் இயக்கியிருக்காரு. இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்று பல சாதனைகளை படச்சுருக்கு. இந்த படத்தோட பிரமாண்ட வெற்றிய தொடர்ந்து 2.O-னு இரண்டாம் பாகமும் உருவாகியிருக்கு.

ரெண்டாவதா நாம பாக்கப்போற படம் ‘அசுரன்’. நடிகர் தனுஷ் & இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில 2019-ல வெளியாகி சூப்பர் ஹிட் படமா கொண்டாடப்பட்ட அசுரன் – எழுத்தாளர் பூமணி எழுதிய ஒரு அட்டகாசமான கதை ‘வெக்கை’. இந்த கதையோட முக்கியத்துவம் அப்புறம் நுணுக்கமான வாழ்வாதாரம் பற்றி நல்ல தெருஞ்சுகிட்ட இயக்குனர் வெற்றிமாறன், இந்த கதையோட கரு அடுத்து சில கதாபாத்திரங்கள்-ல base ஆ வச்சு இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றவாறு வடிவமைச்சு இயக்கியிருக்காரு. இந்த படத்துக்கு எப்படி பட்ட வரவேற்பு கிடைச்சுருக்குனு உங்களுக்கே தெரியும்.

ஷங்கர் இயக்கிய முக்கிய பிளாக்பஸ்டர் பட வரிசையில இப்பவும் டாப் படங்கள்-ல இருக்கிற படம், முதல்வன். இந்த படமும் ஒரு நாவல் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம்தான். எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘பதவிக்காக’ என்ற கதை தான் முதல்வன் படத்தோட கதை அதுமட்டும் இல்ல, முதல்வன் படத்துக்கு சுஜாதாவே திரைக்கதை வடிவமைச்சுருக்காரு. முதல்வன் மாதிரி ஒரு அரசியல் படம் இப்பவும் கொண்டாடப்படு வதற்கு என்ன காரணமா இருக்கும்-னு மறக்காம கமெண்ட்-ல சொல்லுங்க.

பி.எச்.டேனியலால் எழுதிய ‘RED TEA’-ன்ற கதையை தமிழ்-ல இரா.முருகவேள் மொழி-பெயர்ப்பு செஞ்சு ‘எரியும் பனிக்காடு’-னு எழுதின கதைய படுச்சுதான் இயக்குனர் பாலா ‘பரதேசி’ படமே எடுத்துருக்காரு. இந்த படம் இந்தியா சுதந்திரத்திற்கு முன்பு Tea எஸ்டேட் போன்ற இடங்கள்-ல நடந்த வேதனைகளை பற்றி பேசியிருக்கும்.

ஒன்பது ரூபாய் நோட்டு – இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கி சத்யராஜ் நாயகனா நடிச்சுருக்க படம். இப்படத்தோட இயக்குனர் தங்கர் பச்சன் தான் எழுதிய ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவல் கதைய வச்சுதான் இந்த படத்த இயக்கியிருக்காரு. ஆனாலும் அவர் எழுதிய கதைய படத்துக்காக திரைக்கதை மாற்றங்கள் செஞ்சு படத்தை இயக்கியிருக்காரு, தங்கர் பச்சன்.

1967-ல கல்கி இதழ் நடத்திய பிரமாண்ட வெள்ளி விழா போட்டியில முதல் பரிசு வென்ற கதை, ‘முள்ளும் மலரும்’. இந்த கதைய கல்கி இதழ்-ஓட தொடர் கதை எழுத்தாளர் உமாசந்திரன் எழுதியிருக்காரு. 1967-ல வெளியான இந்த கதையை தான் baseஆ வச்சு இயக்குனர் மஹேந்திரன் ‘முள்ளும் மலரும்’ படமா இயக்கியிருக்காரு. இந்த படத்துல ரஜினியோட காளி கதாபாத்திரம் இப்பவும் பலர் status வச்சு கொண்டாடுறாங்க.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதியிருக்க ‘தலைகீழ் விகிதங்கள்’ என்ற கதைய தான் இயக்குனர் தங்கர் பச்சன் ‘சொல்ல மறந்த கதை’ திரைப்படமா இயக்கியிருக்காரு. இந்த படத்துல சேரன், ஜனகராஜ்-னு தமிழ் திரைஜாம்பவான்கள் பலர் நடிச்சிருக்காங்க. சமூகத்தில நடக்குற ஒரு வலிமிகுந்த கதைய உணர்ச்சியோடு மக்களுக்கு இந்த படம் மூலம் சொல்லிருக்காங்க.

எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ஜன்னல் மலர்’ என்ற நாவல் கதையோட ஒரு அங்கம் தான் இறைவி படத்துல வர்ற ஒரு முக்கிய கதை. இறைவி படத்துல நடிகர் விஜய் சேதுபதி நடிச்சுருக்க கதாபாத்திரம் மற்றும் அவரோட கதை எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஜன்னல் மலர் நவலோட கதை. ஜெயில இருந்து ரிலீஸான ஒரு கைதி தன்னோட மனைவி, குழந்தையோட அன்புக்காக ஏங்குவது தான் இந்த நாவல் கதை.

தமிழ் சினிமா நடிகர் மட்டுமில்லாம பல துறைகள்-ல ஜொலிக்கும் கமல் ஹாசன், 1984-ல எழுதியிருக்க கதை தான் ‘தாயம்’. ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதையாகவும், கிரைம் கதையாகவும் இருக்கிற இந்த தாயம் கதைய, படமாக இயக்க சில மாற்றங்கள் செஞ்சு திரைக்கதை-யா வடிவமைச்சு எடுத்த படம் தான், ‘ஆளவந்தான்’. இந்த படத்துல வர்ற சைக்கோ கமல் (மொட்ட கமல் – நந்தா கதாபாத்திரதிற்கு) இப்பவும் ரசிகர்கள் மத்தியில மௌசு குறையல.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கு ‘ஏழாம் உலகம்’ என்ற புத்தக கதைய வச்சு தான் இயக்குனர் பாலா ‘நான் கடவுள்’ படமே எடுத்துருக்காரு. இந்த படம் சமூகத்துல நடக்குற யாரும் கண்டுக்காத உண்மையா வெளிச்சம் போட்டு காட்டியிருக்கு. இந்திய அரசு மட்டுமில்லாம பல தனியார் அமைப்புகள் இந்த படத்த பாராட்டி பல விருதுகள் வழங்கி கௌரவிச்சுருக்காங்க.