Specials Stories

G V Prakash Kumar: மனம் மயக்கும் ஜி.வி-யின் டாப் 10 பாடல்கள்

G V Prakash Kumar: மனம் மயக்கும் ஜி.வி-யின் டாப் 10 பாடல்கள்
G V Prakash Kumar: மனம் மயக்கும் ஜி.வி-யின் டாப் 10 பாடல்கள்

G V Prakash Kumar: மனம் மயக்கும் ஜி.வி-யின் டாப் 10 பாடல்கள் – தமிழ் சினிமால சின்ன வயசுலையே கால்தடம் பதிச்சு கலைத்தாயோட அரவணைப்புல வளர்ந்த பல ஜாம்பவான்கள நாம பார்த்திருக்கோம். அப்படிப்பட்ட கலைத்தாயோட வளர்ப்புல இசையால வளர்ந்த ஒரு கலைஞன் தான் ஜீவி பிரகாஷ்.


சின்ன வயசுல இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானோட இசைல பாடகரா அறிமுகமாகி தன்னோட திறமையால தேசிய விருது வாங்கி! இசை அசுரனா வளர்ந்திருக்காரு ஜீவி பிரகாஷ். ஜீவி பேர கேட்ட உடனே பல பாடல்களும்,பல பின்னணி இசையும் நியாபகம் வரும். அந்தளவு இசைத்துறைல தன்னோட தனித்துவமான இசையால முன்னணி இசையமைப்பாளரா மாறியிருக்காரு ஜீவி பிரகாஷ்.

இப்ப வரைக்கும் எத்தன பைக் ஹார்ன்ஸ் Different-டா வந்தாலும்… கண்டிப்பா 90’s கிட்ஸ் மனசுல ரப்பர் வச்சு அழிச்சாலும் மறக்கவே முடியாத ஒரே ஒரு பைக் ஹார்ன்னா, அது பல்சர் பைக் ஓடத்துதான்… ‘பொல்லாதவன்’ படத்துல நம்ம ஜீ.வி. பிரகாஷ் போட்ட அந்த BGM இப்போ வரைக்கும் 90’s கிட்ஸை கட்டிப்போட்டு வைச்சிருக்குனு சொல்லலாம்…

பொதுவா 5 வயசு, 6 வயசு இருக்குற குழந்தைகளோட பெற்றோர்கள், “எந்த ஸ்கூல்ல சேர்க்கலாம், என்ன கிளாஸ் சேர்க்கலாம்?” ன்னு தான் யோசிப்பாங்க… ஆனா நம்ம ஜீ.வி.ஓட மாமா வான திலீப் குமார் எனும் ஏ.ஆர். ரஹ்மான், நம்ம ஜீ.வி.யோட சிங்கிங் டாலன்ட்டை அப்போவே புரிஞ்சி, அந்த மழலை குரல.. “சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே கலக்குது பார் இவ ஸ்டைலு சிக்குவாலா சிக்குவாலா மயிலு இவ ஓகேனா அடி தூளு…”ன்னு கொஞ்சம் தமிழ் ல குயில் மாதிரி பாடவச்சிட்டாரு…

“யாருடா இந்த குழந்தை?” ன்னு ஊரையே திரும்பி பார்க்க வைச்சிட்டாரு! அதுக்கப்புறம் “மடராசா சுற்றிப் பார்க்க போறேன்…” “குச்சி குச்சி ரக்கம்மா…” “குழுவலிலே…” ன்னு அந்த பிஞ்சுக் குரல்ல பாடி, அப்போவே நம்ம ஜீ.வி., தமிழ்சினிமாவில ஒரு பாடகரா அறிமுகமாகிட்டாரு…

அதுவரைக்கும் Child Playback Singer ஆ கலக்கிட்டு இருந்த ஜீ.வி., 2006-ல் வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படத்துல மியூசிக் கம்போஸ் பண்ணி, மியூசிக் டைரெக்டரா அவதாரம் எடுத்தார்… இப்போ வரைக்கும் அந்த படத்துல வர “உருகுதே மருகுதே” பாட்டுக்கே தனி ஃபான் பேஸ் இருக்கு!

இப்போ வரைக்கும் ஜீ.வி. பிரகாஷ் கிட்டத் தட்டா 100+ படங்களுக்கு மேல work பண்ணியிருக்காரு. அவரு work பண்ண பாட்டுல Top 10 songs னு எடுத்தோம்னா, அதுல முதல் பாட்டா வரது கண்டிப்பா:

(1) அக்கம் பக்கம் – கிரீடம் (2007)

2007ல ரிலீஸான கிரீடம் படத்துல வந்த “அக்கம் பக்கம்” பாடலைத் தவிர வேற எதுவுமே இந்த இடத்துல இருக்க முடியாது. இந்த மாதிரி ஒரு deep melody-ய, சாதனா சர்கம் ஓட soothing voiceல வேற யாராலையும் கொடுக்கவே முடியாது. அதோட நா.முத்துக்குமார் எழுதின lyrics, இந்தப் பாட்டுக்கு extra அழகு சேர்த்து விட்டது.

ஜீ.வி.ஓட music + நா.முத்துக்குமார் lyrics + சாதனா குரல் + அஜித் & திரிஷா screen presence இவங்க எல்லாரும் சேர்ந்தே இந்த “அக்கம் பக்கம்” பாட்டை literally next level-க்கு கொண்டு போயிருக்காங்க.

(2) பூக்கள் பூக்கும் தருணம் – மதராசப்பட்டினம் (2010)

2010ல வந்த மதராசப்பட்டினம் படத்திலிருந்து, “பூக்கள் பூக்கும் தருணம்”ன்னு சொல்லும்போதே, ஒரு calm ஆன feel வரும். இந்தப் பாட்ட ரூப்குமார் ராதோட் & ஹரினி குரலோட perfectly set பண்ணிருக்கார் நம்ம ஜீ.வி. அவரு இதல use பண்ணிருக்குற piano, violin, soft tabla, gentle humming – இதெல்லாம் சேர்ந்து ஒரு classical divine love feel-க்கே கொண்டு போயிரும். அதோட நா.முத்துக்குமார் எழுதின lyrics, அந்த vintage காதல் feel-ஐ என்ன level ல சொல்லிருப்பாரு தெரியுமா? அப்படியே time travel பண்ணற மாதிரி இருக்கும்!

(3) யார் இந்த சாலை – தலைவா (2013)

நா.முத்துக்குமார் வரிகளோட, சைந்தவி மெல்லிசை குரலோட, ஜீ.வி. ஓட மெலோடிக் டச் அந்த பாட்ட எங்கையோ கொண்டுபோயிருச்சு… “அதோட விஷுவல் பார்க்கும்போது நம்ம விஜய் மற்றும் அமலாப்பால் ஓட கெமிஸ்ட்ரியும், ஜீ.வி. இசையும் வேறொரு உணர்வை கொடுத்து கொண்டு போகுது…”

(4) யாத்தே யாத்தே – ஆடுகளம் (2011)

இது குத்து பாட்டா, மெலடி பாட்டா? இல்ல… அது mid-melody பாட்டு! ஜீ.வி. ஓட signature beat and bass, ஸ்நேகன் எழுதிய பஞ்ச் வரிகள், G.V ஓட Peppy Beats la இந்த மொத்த பாட்டையும் தெறிக்கவிற்றுப்பாங்க… அதோட இந்த பாட்டு தனுஷ் ஓட Screen presence-அ Elevate பண்ணி காமிச்சுது…

(5) பிறை தேடும் இரவிலே-மயக்கம் என்ன (2011)

இந்த பாட்ட கேக்கும் போது, மயக்கம் என்ன படத்துல வர யாமினியாவோ, கார்த்தியாவோ நம்பள நாமள நினைச்சுட்டு ஃபீல் பண்ணிட்டு இருப்பாேம். சைந்தவி-ஜீ.வியோட வாய்ஸ், வரிகள் வராத இடத்துல ஒலிக்கப்பட்ற பியானோன்னு, காரணமே இல்லாம பலருக்கு கண்ணீர வரவச்சுரும். தனுஷ் ஜீ.வி.காம்போ-ல சூப்பர் ஹிட் ஆன பாடல்கள்ள இது ரொம்ப முக்கியமான ஒன்னு.

(6) அன்யாடே-ராஜா ராணி (2013)

இந்த பாட்ட நீங்க பெருசா கேள்விப்பட்டிருக்க வாய்பில்ல. அட்லீயோட முதல் படமான ராஜா ராணி படத்துலதான் இந்த பாட்டு இருக்க வேண்டியது. ஆனா, படத்துல இந்த பாட்ட கட் பண்ணிட்டாங்க. சக்திஸ்ரீ கோபாலனோட வாய்ஸ்ல, “அசந்தாப்புல அள்ளிக்கிட்டானே..”னு இந்த பாட்டு ஆரம்பிக்கும் போது அப்டியே மொத்தமா நம்ப மனச அள்ளிப்பாங்க. இத கேக்கும் போது ஒரு பொண்ண அப்டியே தேடிப்புடிச்சு லவ் பண்ணனும்னு தனக்குள்ள தோனுனதா, அட்லீயே ஒரு இண்டர்வியூ-ல சொல்லி இருக்காரு. இதுக்கான அத்தன கிரெடிட்ஸும், மியூசிக் டைரக்டர் ஜீ.வி.பிரகாஷ் குமாருக்குதான் போய் சேரும்.

(7) ஆரிரோ ஆராரிரோ-தெய்வ திருமகள் (2011)

ஜீ.வி. பிரகாஷ் ஓட பல ரொமெண்டிக் ஹிட்ஸ் கேட்ருப்போம், அதையெல்லாம் கேட்கும் போது மனசுக்குள்ள காதல் அப்டியே பொங்கி வழிஞ்சிருக்கும். ஆனா, குழந்தையே இல்லன்னா கூட நமக்குள்ள தாய் அல்லது தந்தை பாசத்த வரவைக்கிற பாட்டு..“ஆரிரோ..ஆராரிரோ..” பாட்டுதான். தெய்வத்திருமகள் படத்துல வர்ர இந்த பாட்டுல விக்ரம் நடிப்பு, ஹரிச்சரனின் குரல் இந்த பாட்டோட மூச்சுன்னா ஜீ.வி.யோட மியூசிக்தான் இதுக்கு ஹார்ட்டா இருந்துச்சு.

(8) பூவினை திறந்து கொண்டு-ஆனந்த தாண்டவம்

தமிழ் சினிமால வர ஒரு சில படங்கள் ஹிட் ஆகலைனாலும், பாடல்கள் பெரிய ஹிட் ஆகியிருக்கும். அப்படிப்பட்ட movies லிஸ்ட்ல ஆனந்த தாண்டவம் படத்தையும் சேர்த்துக்கலாம். இந்த படத்துல வர்ர கனா காண்கிறேன், பாட்ட கேட்ருப்போம். ஆனா, பூவினை திறந்துகொண்டு பாட்டு ரொம்ப underrated ஆ இருந்தாலும், எப்ப கேட்டாலும் refreshing feel-அ கொடுக்கும். இத, ஸ்ரீனிவாஸ்-ஷ்ரேயா கோஷல் பாடியிருப்பாங்க.

(9) எள்ளு வய பூக்களையே-அசுரன்

ஜீ.வி.பிரகாஷ் குமார்-வெற்றிமாறன்-தனுஷ் காம்போன்னாலே கண்டிப்பா ஹிட்தான்னு எல்லாருக்கும் தெரியும். அப்படி இவங்க கூட்டணில உருவான ஒரு படம்தான் அசுரன். இந்த படத்துல வர எல்லா பாட்டுமே மனசுல ஏதோ கொடையுற உணர்வ கொடுக்கும். குறிப்பா, எள்ளு வய பூக்களையே பாட்டு, உண்மையாவே நாம இறந்த ஒருத்தங்களோட வீட்ல இருக்குற உணர்வ கொடுக்கும். ஜீவி மியூசிக் ல சைந்தவி இந்த பாட்ட பாடியிருப்பாங்க.

(10) வானே வானே – அமரன்

ரீசண்ட் டைம்ஸ் மனசுல ரொம்ப தாக்கத்த ஏற்படுத்துற மியூசிக் வரது ரொம்ப கம்மி ஆயிடுச்சுல்ல? அப்படிப்பட்ட குறைய தீர்த்து வெச்ச படம்தான் அமரன். குறிப்பா இந்த படத்துல வர வானே வானே பாட்டு க்ளைமேக்ஸ்ல பலர் விசும்பி விசும்பி அழுவரதுக்கு காரணமா இருந்துச்சு.

இப்படி இந்த பத்து பாட்டு மட்டுமில்லாம ஜீவி பிரகாஷோட பெஸ்ட்னா ஆயிரத்தில் ஒருவன் , மதராசப்பட்டினம்,ராஜா ராணி,ஆடுகளம், மயக்கம் என்ன,சூரரைப்போற்று, தெய்வத் திருமகள், அசுரன், தங்கலான், அமரன்னு பல படங்களோட பின்னணி இசையையும் சொல்லியே ஆகணும்.

தமிழ் மண்ணோட பெருமை,காதல் ,காதல் தோல்வி, நட்பு,பிரிவு,தனிமை, முதல் காதல் இப்படி எந்த ஒரு கட்டத்துல நீங்க வாழ்ந்திட்டு இருந்தாலும் ஜீவி பிரகாஷோட இசை நமக்கு துணையா இருக்கும். ஜீவி இன்னும் இந்திய சினிமால பல படங்கள் இசையமைச்சு இசைத்துறைல மிகப்பெரிய விருதுகள் ஜெய்க்க சூரியன் FMன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article by RJ DURGA.

About the author

Sakthi Harinath