Specials Stories

மருத்துவர்கள் தினம் – நம் வாழ்வின் நாயகர்களுக்கு ஒரு நன்றியின் நாள்

july 1 docters day
july 1 docters day

மருத்துவம் என்பது கலை மற்றும் அறிவியல் இரண்டிற்கும் மேலாக மனித நேயத்தின் உச்சமாகும். ஒரு மருத்துவரின் வேலையோ, நேரத்திற்கேற்ப வேலை செய்யும் அலுவலகப் பணியாளரல்ல. அவர் ஒரு அறிக்கையிடப்பட்ட அர்ப்பணிப்பின் உருவம்.

மனிதர்களின் வலியில் ஆறுதல் தரும் மனிதர் தான் மருத்துவர். ஒரு மருத்துவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையின் பல பகுதிகளை தியாகம் செய்கிறார். குடும்பத்தை விட நோயாளிக்கு முக்கியத்துவம் தருகிறார். ஒருபோதும் நேரம் பார்த்து வேலை செய்ய மாட்டார். அவசர அவசரமாக இரவு நேரங்களில் அழைப்பு வந்தாலும், நேரில் வந்து நம் உயிரைக் காக்க முனைந்து ஓடுவார். மருத்துவர்களின் சேவையை பாராட்டும் வகையில், இன்று மருத்துவர்கள் தினம் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் அனுசரிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் சிறப்பு விழாக்கள், கலந்துரையாடல்கள், பாராட்டு விழாக்கள், நன்றி உரைகள், மற்றும் கல்வி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.ஒரு சில தடவைகள் மருந்துகளால் மட்டுமல்ல, மருத்துவரின் ஆறுதல் வார்த்தைகளால் நம்முள் நம்பிக்கை ஏற்படுகிறது.

இன்று, பல பெண்கள் மருத்துவம் கற்றுக்கொண்டு மருத்துவமனைகளில் மட்டுமல்ல, ஊரக சேவைகளிலும் முன்னிலை வகிக்கிறார்கள். கஷ்டமான நேரங்களில், இரவு நேர நோயாளிகளை கவனிப்பதில் தங்கள் குடும்பத்தை தாண்டி மனிதநேயம் காட்டுகிறார்கள். இன்று நாம் அனுபவிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவர்கள் தான் அடித்தளம் போட்டவர்கள்.

ஜூலை 1 – மருத்துவர்களின் தினம், ஒரு மரியாதை, நன்றி, வாழ்த்துக்கள் எனும் அனைத்து உணர்வுகளின் ஒன்று சேர்க்கை.

மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்! உங்கள் சேவைக்கு நன்றி.

Article By – RJ RAMYA