Cinema News Stories

மரகத நாணயத்தின் 4 ஆண்டுகள் !!!

A.R.K சரவணன் இயக்கத்தில் ஆதி நடித்து வெளிவந்த மரகத நாணயம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்ட Fantasy காமெடி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஆதியுடன் இணைந்து நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனிஷ் காந்த், மைம் கோபி, எம்.எஸ் பாஸ்கர், அருண்ராஜா காமராஜ், சங்கிலி முருகன், காளி வெங்கட் ஆகியோர் நடித்திருப்பர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படமாக மரகத நாணயம் அமைந்தது.

ஒரு அரிய வகை மரகத நாணயத்தை ஏற்கனவே இறந்து போனவர்களின் ஆவியுடன் சேர்ந்து கைப்பற்ற துடிக்கும் நாயகனின் கதையே மரகத நாணயம்.

இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளரான திபு நினன் தோமஸ் அவர்கள் இசை அமைத்தார். இப்படத்தில் அமைந்த “நீ கவிதைகளா” பாடல் பிரதீப் குமார் குரலில் தற்போது வரை பலரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்-ல் வலம் வருகிறது.

இப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் “மரகதமணி” என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படத்தின் திரைக்கதை நகர்வும், இப்படத்தில் இடம் பெற்றிருந்த கலகலப்பான காமெடி காட்சிகளும் படம் பார்ப்போரை கவரும் வகையில் அமைந்திருந்தது.

இப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். படக்குழுவினர் வெளியிட போஸ்டரை கீழே காணுங்கள்.

Image