Cinema News Stories

மீண்டும் சூப்பர்ஸ்டாரின் Bloodstone !!!

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற இந்தியாவின் மற்ற மொழிகளிலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சில படங்களில் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்ததே. அவரது தனித்துவமான நடிப்பும் Mass-ஆன Style-ம் இந்திய திரையுலகை மட்டுமின்றி ஹாலிவுட்டையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 1988-ஆம் ஆண்டு நடித்த ஆங்கில படமான “Bloodstone” திரைப்படம் மீண்டும் வெள்ளித்திரையில் Digital தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது. வருகிற மார்ச் 26-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளது. சூப்பர்ஸ்டார் அவர்கள் நடித்த முதல் மற்றும் ஒரே ஹாலிவுட் திரைப்படம் “Bloodstone” என்பது குறிப்பிடத்தக்கது.

Image

ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் Busy-ஆன காலக்கட்டமான 80-களில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் பல படங்களில் ரஜினி நடித்துள்ளார் என்பது வியப்பளிக்கும் விஷயமே. இப்படத்தை சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்காக படக்குழுவினர் தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிட்டனர். இப்படத்தின் தமிழ் Version-ற்கு “வைரவேல்” என பெயரிடப்பட்டது.

இப்படத்தில் ரஜினி ஒரு taxi driver-ஆக நடித்திருப்பார். இந்தியாவின் மிகவும் விலைமதிப்புள்ள Bloodstone எனப்படும் Ruby கல்லை மையமாக வைத்தே இப்படத்தின் கதை நகரும். 13-ஆம் நூற்றாண்டில் இறந்து போன ஒரு இளவரசியின் கிரீடத்தில் இருந்த Bloodstone-ஐ இந்திய அரசாங்கம் காலம் காலமாக பாதுகாத்து வைத்திருந்த நிலையில், திடீரென அந்த Bloodstone காணாமல் போனது என்ற செய்தியுடன் இப்படத்தின் கதை தொடங்குகிறது.

எதிர்பாராத விதத்தில் அந்த bloodstone ரஜினியின் கைகளில் சிக்க, கடைசியில் யார் அந்த bloodstone-ஐ உரிமையாக்குகிறார்கள் என்பதே இப்படத்தின் கதைச்சுருக்கம். இப்படத்தில் சூப்பர்ஸ்டாருடன் இணைந்து ஹாலிவுட் நடிகர்கள் பிரெட் ஸ்டிம்லி, அன்னா நிக்கோலஸ், கிறிஸ்டோபர் நீம், சார்லி பிரில் ஆகியோர் நடித்துள்ளனர். விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளும், திரைக்கதை நகர்வும் இப்படத்திற்கு வலுசேர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும்.

Bloodstone திரைப்படத்தை மீண்டும் திரையில் காண சினிமா ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு அமைந்துள்ளது என்றே சொல்லலாம். அண்ணாத்த திரைப்படத்திற்காக ஆவலாக காத்திருக்கும் சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு Bloodstone Re-release ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.