தளபதி விஜய் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இயக்குனர் மிஷ்கின் அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சமீபத்தில் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் “ட்விட்டர் ஸ்பேஸ்” எனும் புதிய Update வெளியிடப்பட்டது. அதில் ட்விட்டரில் உள்ள மக்களும், பிரபலங்களும் தங்களது Followers உடன் ஆடியோ Chat செய்து கொள்ளும் வசதி உள்ளது.
நேற்று ட்விட்டர் ஸ்பேசில் மிஷ்கின் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தபோது, ரசிகர் ஒருவர் மிஷ்கினிடம் “நீங்கள் விஜயை வைத்து படம் எடுத்தால் தளபதியை எந்த கேரக்டரில் நடிக்க வைப்பீர்கள் ?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மிஷ்கின் “எனது திரைப்படத்தில் விஜய்க்கு ஒரு ஸ்டைலான துப்பறிவாளன் ‘ஜேம்ஸ்பாண்ட்’ போன்ற கதாபாத்திரத்தை வடிவமைப்பேன் ” என பதில் கூறினார்.
மிஷ்கின் சொன்ன இந்த பதில், தளபதி விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘மிஷ்கின் இயக்கத்தில் தளபதி விஜய் ஒரு திரில்லர் படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்’, என கற்பனை செய்து விஜய் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மிஷ்கின் இயக்கி வெளிவரவிருக்கும் பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியாவிற்கு எப்படிப்பட்ட கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “இப்படத்திற்காக ஆண்ட்ரியா தேசிய விருது வாங்குவார் ” என பதிலளித்துள்ளார்.
மிஷ்கினின் இந்த உரையாடல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விதத்தில் அமைந்திருந்தது. மிஷ்கின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் பிசாசு திரைப்படம் மாபெரும் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.