செந்தில், குணா, வேலு, தம்பி, சந்திரா இவங்க எல்லாரையும் அன்பு வாழ்க்கையில் இணைக்கிறது ராஜன் தான்… அப்படின்னு நம்ம வெற்றிமாறன் அவர்கள் சொன்ன திரைப்படம் தான் வடசென்னை.
2018 இந்த திரைப்படம் நம்ம வெற்றிமாறன் அவர்களால் இயக்கப்பட்டு ரிலீஸ் பண்ணப்பட்டது. இந்த படத்துல நம்ம தனுஷ் கேரக்டர் எல்லாருக்குமே பிடித்த மாதிரி இருந்துச்சுங்க. அப்புறம் இந்த படத்துல இன்னொரு முக்கியமான கேரக்டர் தான் இயக்குனர் அமீர் அவர்கள் நடிச்ச ராஜன் கதாபாத்திரம். இந்த படம் கொஞ்சம் Violent-அ இருந்தாலும் இந்த படத்துல Haters இல்லாத கதாபாத்திரங்கள் அப்படின்னா நம்ம தனுஷ் ஓட அன்பு கேரக்டரும், நம்ம அமீர் அவர்களுடைய ராஜன் கேரக்டரும் தான்.
நாம இதுவரைக்கும் நம்ம தமிழ் சினிமால ரவுடிசம் பண்றவங்களையும், கட்டப்பஞ்சாயத்து பண்றவங்களையும் வில்லன் குரூப்ல தான் பார்த்துருக்கோம். ஆனா இது ரெண்டும் இருக்கிறவங்களும் நல்லவங்களா இருப்பாங்கன்ற ஒரு விஷயத்தை வடசென்னை திரைப்படம் மூலமா நம்ம வெற்றிமாறன் நமக்கு காட்டிருந்தாரு. நம்ம வெற்றிமாறன் அவர்களுடைய ஸ்டோரி இந்த திரைப்படத்த மென்மேலும் எல்லாருக்கும் பிடிக்க வச்சிருந்துச்சு. ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுடைய யதார்த்தமான நடிப்பு இந்த படத்துக்கு இன்னும் ஒரு போனஸ் கொடுத்து இருந்துச்சு. அது மட்டும் இல்லைங்க இந்த படத்துக்காக நம்ம தனுஷ் கேரம்போர்டு பயிற்சி கூட பண்ணிருக்காரு.
சண்டை காட்சிகள் டுவிஸ்ட் அப்படின்னு இந்த திரைப்படம் பார்க்கிற எல்லாரையுமே கவர்ந்து இழுக்கிற மாதிரி தான் இருக்கும். இந்த படத்தினுடைய Anniversary-அ கொண்டாடுற விதமா இந்த படத்த சென்னைல ஒரு தியேட்டர்ல Re-release பண்ணி இருந்தாங்க. அப்பயுமே கூட்டம் குறையவே இல்ல, இப்ப நாம எல்லாருமே ஒண்ணா காத்துகிட்டு இருக்குற ஒரே ஒரு விஷயம் எதுக்குன்னா? நம்ம வெற்றிமாறன் அவர்கள் கிட்ட இருந்து வடசென்னை 2 எப்ப ஆரம்பிக்க போறாங்க? அந்த படத்துல யார் யாரெல்லாம் இருக்க போறாங்க? அப்படின்ற ஒரு விஷயம் தான்.
இந்த படத்த நம்ம வெற்றிமாறன் 2003-லயே யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு. அதுக்காக நம்ம வெற்றிமாறன் வடசென்னை பகுதி முழுக்க நிறைய அலைஞ்சு திரிய ஆரம்பிச்சாரு. அதுக்கப்புறம் அந்த கதைக்களத்தில் கார்த்தி அவர்கள நடிக்க வைக்க பிளான் பண்ணிருந்தாங்க. அதுக்கப்புறமா நம்ம சிலம்பரசனுக்கும் பேச்சு போயிருந்துச்சு. யோசிச்சு பாருங்களேன், ஆனா உண்மை என்னன்னா அன்பு கதாபாத்திரத்தில் நம்ம தனுஷ தவிர வேற யாரும் Perfect-அ பண்ணிருக்க முடியாதுன்ற மாதிரி அவருடைய நடிப்பு இருந்தது.
இந்த திரைப்படம் உருவாகி திரைக்கு வந்ததுக்கு அப்புறமா நிறைய பேரு திரைப்படத்தை கொண்டாட ஆரம்பிச்சாங்க. இப்போ எல்லாருமே Part 2-க்கு வெயிட் பண்ணிட்டு இருக்கோம். தனுஷ் வெற்றிமாறன் 2 பேருமே கூட அது சீக்கிரம் நடக்கனும்னு தான் இருக்காங்க. விடுதலை பாகம் 2, வாடிவாசல் இது முடிஞ்சதும் வடசென்னை 2 அப்படின்னு வெற்றிமாறன் சொல்லியிருக்காரு. வெற்றி ஒரு வார்த்தை சொன்னா போதும்னு தனுஷ் காத்திருக்காரு. சீக்கிரம் அது நடக்கட்டும். நம்ம எல்லாருடைய ஆசையும் நிறைவேறட்டும்.