ஜோதிகா நடிப்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. இப்படம் வெளியான நாள் முதலே நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது. அறிமுக இயக்குனர் பெட்ரிக் இயக்கியுள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
![](https://www.suryanfm.in/wp-content/uploads/2020/06/pv-1-3-1024x682.jpg)
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு சமீபத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. அந்த வகையில் பொன்மகள் வந்தாள் படமும் ரசிகர்களால் கொண்டாப்பட்டு வருகிறது. ஜோதிகாவின் தத்ரூபமான நடிப்பும் வசனங்களும் கதையை நம் ஆழ்மனதில் பதியவைத்துள்ளது.
2004-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலையை மீண்டும் விசாரிக்கும்படி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் வகையில் இப்படம் அமைந்திருக்கிறது. பல திருப்புமுனைகளையும், விறுவிறுப்பான திரைக்கதையும் இப்படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும்.
![](https://www.suryanfm.in/wp-content/uploads/2020/06/pv-3-2-1024x682.jpg)
இப்படத்தில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், பாக்கியராஜ், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ” தாமதமாக கிடைக்கப்படும் நீதியும் அநீதிக்கு சமமே ” என்ற கருத்தை வலியுறுத்தும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் வெற்றியை சமீபத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் சந்தோஷமாக கொண்டாடினர். மேலும் இந்த வெற்றிப்படத்தின் இயக்குனர் பெட்ரிக் தன் முதல் படத்திலேயே தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றியுள்ளதால் அவருக்கு அன்பளிப்பாக “APPLE MACBOOK PRO” மடிக்கணினியை சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து பரிசாக கொடுத்துள்ளனர்.
![](https://www.suryanfm.in/wp-content/uploads/2020/06/pv-2-3-682x1024.jpg)
இந்த அன்பளிப்புடன் இணைந்திருந்த வாழ்த்து கடிதத்தில் இயக்குனர் பெட்ரிக்கின் மகன் ஜேடனின் பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துள்ளனர்.