ஒரு சிலர் குரல் நமக்குள்ள பக்திய ஏற்படுத்தும்,சிலர் குரல் புரட்சிய ஏற்படுத்தும் ஆனா ஒருத்தர் குரல் பக்தி,புரட்சி,காதல்னு எல்லாத்தையும் நமக்குள்ள கொண்டுவரும்னா அவரோட குரல் தான்.60 கள்ல அவர் பாடுன தத்துவங்கள் இன்னைக்கும் நம்ம வாழ்க்கைல ஓடிட்டே இருக்கு…எங்கே நிம்மதினு இரவுல யோசிக்கிற மனங்களுக்கு இவர் குரல்தான் துணை.விழுற நேரத்துல நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜானு ஊக்குவிக்குற குரல்,ஒவ்வொரு காதலுக்கும் அன்று,இன்று,என்றும் வரும் இசை குரல் TMS .தமிழ் திரைப்பட இசை உலகில் அழியாத தடம் பதித்த பாடகர்.
டி. எம். சௌந்தரராஜன் 1923 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவருடைய குடும்பத்தில் பக்தி மற்றும் இசை கலந்த சூழல் இருந்ததால் அவர் இயல்பாகவே இசையை நேசிக்கத் தொடங்கினார். அவர் கர்நாடக இசையில் பயிற்சி பெற்றார். அந்தப் பயிற்சி தான் பின்னர் திரைப்பட இசையில் அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது.
திரைப்பட உலகில் வாய்ப்பு பெறுவது அவருக்கு ஆரம்பத்தில் எளிதாக இருக்கவில்லை. பல தடைகள் இருந்தன. பல இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு சென்றார். சிலர் மறுத்தார்கள். ஆனால் அவர் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார். அந்த முயற்சிக்குப் பிறகு தான் திரைப்படங்களில் பாட வாய்ப்பு கிடைத்தது.
1950களில் இருந்து தமிழ் சினிமாவில் டி.எம்.எஸ் குரல் அதிகமாக ஒலிக்கத் தொடங்கியது. அந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த பலருக்கும் அவர் பின்னணி பாடகராக பாடினார். குறிப்பாக நடிகர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசனுக்கு அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் டி.எம்.எஸ் குரலில் இருந்த வீரமும் உற்சாகமும் அந்த கதாபாத்திரங்களுடன் அழகாக பொருந்தியது. அதே நேரத்தில் சிவாஜி கணேசனின் உணர்ச்சி நிறைந்த நடிப்பிற்கு டி.எம்.எஸ் குரலில் இருந்த ஆழமும் நெகிழ்ச்சியும் சிறப்பாக இணைந்தது. இதனால் இந்த இரண்டு நடிகர்களுக்கும் அவருடைய குரல் மிகவும் பொருத்தமானதாக ரசிகர்கள் உணர்ந்தனர்.
டி.எம்.எஸ் பாடிய பல பாடல்கள் இன்று வரை மக்கள் மனதில் வாழ்கின்றன. பக்தி பாடல்கள், காதல் பாடல்கள், வீரப்பாடல்கள், தத்துவ பாடல்கள் என பல வகைகளில் அவர் பாடியுள்ளார். எந்த வகை பாடலாக இருந்தாலும் அதில் உயிர் ஊட்டும் திறமை அவருக்கு இருந்தது.
அவருடைய குரலில் இருந்த தெளிவு மற்றும் சக்தி தான் அவரை மற்ற பாடகர்களிலிருந்து வேறுபடுத்தியது. ஒரு பாடலை அவர் பாடும்போது அந்த கதாபாத்திரத்தின் உணர்ச்சியை முழுமையாக வெளிப்படுத்துவார். அதனால் தான் அவர் பாடிய பாடல்கள் திரைப்படத்தை தாண்டி மக்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறின.
திரைப்பட பாடல்களுடன் சேர்த்து டி.எம்.எஸ் பல பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். முருகன், விநாயகர், அம்மன் போன்ற தெய்வங்களைப் போற்றும் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக முருகன் பாடல்கள் அவருடைய குரலில் கேட்கும் போது பக்தி உணர்வு அதிகமாகும் என்று பலர் கூறுவர்.
டி.எம்.எஸ் குரல் ஒரு பாடகரின் குரல் மட்டுமல்ல. அது ஒரு காலத்தின் அடையாளம். அந்த காலத்தில் தமிழ் சினிமாவை நினைத்தால் அவருடைய குரல் நினைவுக்கு வரும். பல தலைமுறைகளும் அவரது பாடல்களை கேட்டுப் பெரிதாக வளர்ந்துள்ளன.
இசைக்கு அவர் காட்டிய அர்ப்பணிப்பு மிகுந்தது. பல ஆயிரம் பாடல்களை அவர் தனது வாழ்க்கையில் பாடியுள்ளார். பல மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார். ஆனால் தமிழ் மொழியில் அவர் பாடிய பாடல்களே அதிகம் புகழ் பெற்றன.
டி.எம்.எஸ் அவர்களின் பாடல்கள் இன்று வரை வானொலியில், தொலைக்காட்சியில், இசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஒலிக்கின்றன. புதிய தலைமுறையும் அவருடைய குரலை ரசித்து கேட்கிறது. இது ஒரு உண்மையான கலைஞனின் வெற்றியை காட்டுகிறது.
ஒரு நல்ல பாடகர் மட்டுமல்லாமல் அவர் ஒரு நல்ல மனிதரும் ஆவார். எளிமையான வாழ்க்கை முறையை அவர் கடைபிடித்தார். ரசிகர்களிடம் அன்பாக நடந்துகொண்டார். கலைக்கு மதிப்பு கொடுத்தார்.
தமிழ் இசை உலகில் டி.எம்.எஸ் போன்ற குரல் மீண்டும் வருவது மிகவும் அரிது என்று பல இசை ரசிகர்கள் கூறுகின்றனர். அவருடைய பாடல்கள் காலத்தை தாண்டி என்றும் வாழும். எம். சௌந்தரராஜன் மறைந்தாலும், அவரது குரல் இன்னும் உயிருடன் இருக்கிறது. அவர் பாடிய பாடல்கள் இன்னும் பல தலைமுறைகளுக்கு ஊக்கமும் மகிழ்ச்சியும் அளித்து வருகிறது. என்றும் நம்முடன் பயணிக்கும் இசை குரலிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கூறி மகிழ்கிறது சூர்யன் fm .
Article By – RJ Mozhiyan

