சில திரைப்படங்கள் சிரிக்க வைக்கும்; சில திரைப்படங்கள் சிந்திக்க வைக்கும். ஆனா, எப்போவோ வெளி வருகிற ஏதோ ஒரு திரைப்படம் தான் நம்மள சிரிக்கவும் வைக்கும் சிந்திக்கவும் வைக்கும்.
அப்படிப்பட்ட படங்களின் வரிசைல ஒரு வருஷத்துக்கு முன்னாடி வெளி வந்த “டான்” படமும் ஒன்னு. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த இந்த படம் தான் இப்போது வரை அவருடைய படங்கள்-ல அதிக வசூல் சம்பாதித்துக் கொடுத்த படம்.
வசூல் மட்டும் இல்லைங்க பல குடும்பங்களோட மனசையும் சாம்பாதித்து கொடுத்தது. நம்ம அப்பா ஏன் நம்ம கிட்ட கண்டிப்பா நடந்துக்குறாரு? அவருக்கு உண்மையாவே நம்ம மேல பாசம் இருக்கா? நம்ம மேல அவருக்கு நம்பிக்கை இருக்கா?
இது மாதிரி பல கேள்விகள் உள்ள பசங்க உதட்டுல புன்னகையோடவும் கண்கள்ல கண்ணீரோடவும் திரையரங்கை விட்டு வெளியேறுனாங்க. அந்த அளவுக்கு ஒரு தந்தையின் பாசத்தை ரொம்ப உருக்கமா சொல்லி இருப்பாரு இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.
ஒரு இயந்திரம் படம் பார்த்து இருந்தாலும் அந்த படத்தோட கிளைமாக்ஸ் காட்சி அப்போ கண்ணீர் சிந்தி இருக்கும் போல. அந்த அளவுக்கு அப்பாவின் பாசத்தை உரக்க சொல்லியிருப்பாங்க. கதையோட ஆரம்பத்துல நகைச்சுவை மூலமா நம்மள சிரிக்க வைத்து, கடைசில அழ வைத்து ஒரு மூன்று மணி நேரத்துக்கு நமக்கு கிடைத்த சூப்பர் ட்ரீட் தான் “டான்” திரைப்படம்.
இந்த திரைப்படம் வந்து சரியா ஒரு வருஷம் நிறைவாகி இருக்கு. இந்த படத்தோட மிகப்பெரிய வெற்றி என்ன தெரியுமா? என்னைக்காச்சும் டான் படம் தொலைக்காட்சியில போடுறாங்க-னு சொன்னா “ஓ! அந்த படமா, குடும்பமா உக்காந்து ஜாலி-யா பாக்கலாமே”-னு ஒரு பையனையும் அப்பாவையும் ஒன்னா சேர்ந்து பார்க்க வைக்கும்.
இந்த படத்தின் முதல் ஆண்டு நிறைவு அதுவுமா இந்த படைப்பை கொடுத்த எல்லோருக்கும் நன்றி சொல்லி மகிழ்வடைகிறது Suryan FM.