Cinema News Stories

என்னாச்சி !!…. 8 வருஷம் ஆச்சி !!

“ப்ப்பா….” நம்ம மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து சூப்பர் ஹிட்டான “நடுவுல கொஞ்சும் பக்கத்த காணோம் “ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

பாலாஜி தரணீதரனின் மாறுபட்ட கதைக்களத்துடன் மக்களை இப்படம் அழகாய் Entertain செய்துள்ளது என்றே கூறலாம். இப்படத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி, விக்னேஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பர். ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் போது தலையில் அடிபட்டு ஞாபகங்கள் காலியானதால் வரும் விளைவுகளை பார்ப்பவர்கள் ரசிக்கும் வகையில் கோர்வையாக இப்படத்தின் திரைக்கதை எடுத்துச் சொல்லியிருக்கும். மேலும் இப்படத்தின் கதை ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு இப்படம் ஒரு முக்கிய Turning Point-ஆக அமைந்தது. வேத் ஷங்கரின் பாடல்களும் சித்தார்த் விபினின் பின்னணி இசையும் கதையின் நகர்வுக்கேற்ப பொருந்தி Extra Bonus-ஆக அமைந்தது. குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை ஈட்டி தயாரிப்பாளருக்கும், Distributor-களுக்கும் மனநிறைவை கொடுத்தது.

இப்படத்தில் மக்கள் செல்வனின் “என்னாச்சி ….” வசனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு சேர்த்து, Youth-களின் மனதில் மறக்காத வசனமாக மாறிவிட்டது. இப்படத்தின் வெற்றியை நினைவு கூறும் வகையில் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பிரத்யேக போஸ்டர்-ஐ பகிர்ந்துள்ளார்.

” ப்ப்பா…. என்னா படம்ங்க இது, செமையா இருக்கு “, என்று ரசிகர்களை கொண்டாட வைத்த நடுவுல கொஞ்சும் பக்கத்த காணோம் திரைப்படத்தை உருவாக்கிய படக்குழுவினருக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.