Specials Stories

டைட்டானிக் நினைவு நாள்!

உலகின் மோசமான கப்பல் விபத்தாக அறியப்பட்டும் டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய சம்பவம் நிகழ்ந்து 112 ஆண்டுகள் ஆகிறது. உலகின் மிகப் பெரிய கப்பலாக அறியப்பட்ட டைட்டானிக் தனது பயணத்தை தொடங்கி நான்காவது நாளில் எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியதில் ஏராளமான எண்ணிக்கையிலான நபர்கள் பலியானார்கள்.

பல்வேறு பிரபலமானவர்கள், கப்பல் கட்டிட கலைஞர்கள் உள்பட பலரும் உயிரிழந்தனர். ஏப்ரல் 15ஆம் தேதி தான் டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கியது. இந்த நாள் டைட்டானிக் நினைவுநாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் குறிப்பிடத்தக்க கடல் பயணத்தின் வரலாற்றைப் பற்றியும், அதில் உயிர் இழந்தவர்களை நினைவுகூர்ந்தும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு 112வது நினைவு நாளாகும். 1912, ஏப்ரல் 15 உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் நிகழ்ந்தது. தனது முதல் பயணத்தில் எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கிய கப்பலில் பயணித்தவர்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அந்த காலகட்டத்தில் உலகின் மிகப் பெரிய கப்பலாக இருந்த டைட்டானிக் சொகுசு கப்பல் 1909 முதல் கட்டமைக்கப்பட்டது. இந்த கப்பலை முழுமையாக வடிவமைக்க 75,00,000 டாலர்கள் செலவழிக்கப்பட்டன. இதன் உருவாக்கத்தின்போது இரண்டு தொழிலாளிகள் தங்களது உயிரை விட்டனர்.

டைட்டானிக் விபத்தல் உயிர் பிழைத்தவர்களில் 700 பேர் 2009 வரை உயிருடன் இருந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளனர். டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது 2 மாத குழந்தையாக இருந்த மில்வினா டீன், அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். டைட்டானிக் விபத்தில் அவரது தந்தை உயிரிழந்துவிட, அவரது சகோதரர், தாயார் ஆகியோர் லைஃப் போட்கள் மூலம் தப்பித்தனர்.

உலகையே கவலைக்குள்ளாகிய இந்த சோகமான சம்பவத்தையும், இழந்த உயிர்களை நினைவுகொள்ளவும், எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் நிகழாமல் தடுக்க முயற்சி செய்யவும் இந்த டைட்டானிக் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

Article by RJ Shree