Suryan Explains

10 herbs that you can grow in your kitchen garden in Tamil

10 herbs that you can grow in your kitchen garden

10 herbs that you can grow in your kitchen garden – நம்ம சாப்பிடுற சாப்பாட்டில் இருந்து தான் நமக்கான சத்து கிடைக்குது. அதுலயும் சில மூலிகைகளை நம்ம உணவுல சேர்த்துக்கிறோம். உடம்பு சரியில்ல அப்படின்னா உடனே ஹாஸ்பிடல் போறோம். சின்ன தலைவலி, சளி, காய்ச்சல் இது எல்லாத்துக்கும் வீட்டிலேயே ஒரு சொல்யூஷன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். அதுக்கு முக்கியமானது மூலிகைகள். அதுவும் நம்ம வீட்டிலேயே இந்த மூலிகைகளா வளத்தலாம்.

அப்படி நம்ம வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 10 மூலிகைகள் பத்தி தான் பார்க்க போறோம்

  1. துளசி – இதை வெப்பமான பருவத்தில வளர்க்கலாம். இதை பராமரிக்க முழு வெயில் இருக்கணும் டெய்லியும் தண்ணி ஊத்தணும். இந்த துளசி எதிர்ப்பு சக்திக்கு, தும்மலுக்கு நல்லது.
  2. புதினா – நம்ம சமையலுக்கு ரொம்பவே உபயோகமா இருக்கும். புதினாவ ஈரமன்ல பாதி வெயில்ல வச்சு வளர்த்தலாம்.
  3. கொத்தமல்லி – இது குளிர் பருவமான அக்டோபர் பிப்ரவரி மாதத்தில் நல்லா வளரும். சமையலுக்கு உதவியா இருக்கும். இத முழு வெயிலில் தினமும் தண்ணி ஊத்தி வளத்தனும்.
  4. கருவேப்பிலை – வெயில் பருவத்தில நல்லா வளரும். நம்ம தென்னிந்திய சமையல ரொம்ப முக்கியமானது. இதுக்கு முழு வெயில் தேவை அதே மாதிரி தண்ணீர் அடிக்கடி ஊத்தணும்.
  1. கற்றாழை – உஷ்ணம் மற்றும் வறண்ட வானிலைல நல்லா வளரும். தோல் பராமரிப்புக்கு, உடல் குளிர்ச்சிக்கு ரொம்ப நல்லது. இதுக்கு அதிக வெயிலும் குறைவான தண்ணியும் தேவை.
  2. வெந்தயம் – குளிர் பருவத்தில நல்லா வளரும். இது சமையலுக்கு யூஸ் பண்ணலாம். இதுக்கு தினசரி தண்ணியும் வெயிலும் தேவை.
  3. ரோஸ்மேரி – குளிர்ச்சி மற்றும் உலர்ந்த இடங்களில் நல்லா வளரும். இது வாசனைக்கும், நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கும் உதவும். இதுக்கு வெயில் தேவை குறைஞ்ச தண்ணி இருந்தா போதும்.
  4. ஓமம் – இதுக்கு குளிர்பருவம் சிறந்தது. இது சுவைக்கும் சரி, ஜீரணத்துக்கு ரொம்பவே நல்லது. இதுக்கு வெயிலும் கொஞ்சம் உலர்ந்த மண்ணும் தேவை.
  5. மணத்தக்காளி – இது வெயில்ல நல்லா வளரும். நம்ம வயித்து வலிக்கு, காய்ச்சலுக்கு ரொம்பவே நல்லது.

இந்த பத்து மூலிகைகளை நம்ம வீட்டிலேயே வளர்த்தலாம். இதுல மருத்துவ குணங்களும் அதிகம். இது காய்ச்சல், இல்ல உடல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு solution aa இருக்கும்.

About the author

Sakthi Harinath