தமிழ் சினிமாவில் பலருக்கும் தெரிந்த முகம் தான் பவா லட்சுமணன். வடிவேலுடன் பல படங்களில் நடித்துள்ளார். மற்றும் பல முக்கியமான தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
மாயி படத்தில் வடிவேலுக்கு பெண் பார்க்க செல்லும் வாம்மா மின்னலு காமெடியில் இவர் சொன்ன ‘வாம்மா மின்னல்’ வார்த்தை இன்று வரை பிரபலம். அரசு படத்தில் மருதாச்சலம் எனும் ரெளடி கதாபாத்திரத்தில் நடித்து நம்மை சிரிக்க வைத்திருப்பார். மேலும் சூரி, கருணாஸ், ரோபோ சங்கர், சிங்கம் புலி உள்ளிட்ட பலருடன் இணைந்து நகைச்சுவை செய்து நம்மை சிரிக்க வைத்துள்ளார்.
காமெடி நடிகர் பவா லட்சுமணனுக்கு, நீண்ட நாட்களாக சர்க்கரை நோய் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அதிகளவு சர்க்கரை நோய் பாதித்ததால் தற்போது கால் கட்டை விரல் எடுக்கப்பட்டுள்ளது.
உடல்நிலை தேறிய நிலையில் பவா லட்சுமணன், தற்போது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தங்கி, சிகிச்சை பெற்று வருகிறார்.