இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி, யோகிபாபு ஆகியோர் நடிக்கும் திரைப்படம் கா.பே ரண சிங்கம். இப்படத்தின் புன்னகையே பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்பாடலை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையில் அமைந்த இப்பாடல் ஒரு பெண்ணின் எழுச்சி பாடலாக அமைந்துள்ளது. பாடலின் வரிகள் கேட்போருக்கு பெண்மையின் வீரத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது.
குறிப்பாக இப்பாடலில் “அதிகாரத்தின் மீதுஅடியே நீயும் போது” போன்ற வரிகள் அடக்குமுறைக்கு எதிரான வரிகளாக அமைந்துள்ளது. இப்பாடல் வெளியான சில மணி நேரங்களில் இருந்தே இணையத்தில் பெரிதளவில் பகிரப்பட்டு வருகிறது.